கோடை விடுமுறையை ஒட்டி நாளை (ஏப்.30) அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும்: பூங்கா நிர்வாகம் அறிவிப்பு!

சென்னை: கோடை விடுமுறையை ஒட்டி செவ்வாய்க்கிழமை(ஏப்.30) அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2000க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. அதில் சிறுத்தை, வெள்ளை புலிகள், மனித குரங்குகள், வங்காளப் புலிகள், நீர்நாய், சிங்கங்கள் என அனைத்து வகையான விலங்குகளும் உள்ளன.

இந்த பூங்காவில் குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகளின் இருப்பிடம், பூங்கா மீன் மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா கண்காட்சியகம் போன்றவை தனித்தனியாக அமைந்துள்ளது. மேலும் விலங்குகள் கோடைகால வெயிலை சமாளிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் பார்வையாளர்களை கவரும் வகையில் அனைத்துநடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட மக்களின் பொழுதுபோக்கு இடமாக இந்த பூங்கா விளங்குகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவை பார்வையிட்டு செல்கின்றனர்.

வண்டலூர் பூங்கா வழக்கமாக செவ்வாய்க்கிழமை செயல்படாமல் விடுமுறை தினமாக தான் இருக்கும். இந்நிலையில் நாளை (ஏப்.30) பூங்கா திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. “பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறையை முன்னிட்டு, 30.4.2024 (செவ்வாய்கிழமை) அன்று அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்படும்” என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post கோடை விடுமுறையை ஒட்டி நாளை (ஏப்.30) அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும்: பூங்கா நிர்வாகம் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: