முக்கிய செய்தி தமிழகம் பெருகும் ஆர்வம்..குறையும் தடுப்பூசி!: தமிழகத்தின் பல இடங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு..ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள்..!! Jun 07, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சிவகங்கை: தமிழ்நாட்டின் பல இடங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஊசி போட சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மக்களிடையே ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக தடுப்பூசி போடுவதற்கு கூட்டம் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஊசி போட்டு செல்கின்றனர். இந்நிலையில், விராலிமலையில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வத்துடன் முன்வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. இதேபோன்று சிவகங்கையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தும் தடுப்பூசி கிடைக்காததால் பொதுமக்கள் விரக்தி அடைந்தனர். இதேபோன்று கும்பகோணம் மற்றும் கரூரிலும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு செய்தவர்கள், குறிப்பிட்ட தேதியில் மருத்துவமனைக்கு சென்றும் தடுப்பூசி மருந்து இல்லை என்று மருத்துவ நிர்வாகம் திருப்பி அனுப்பியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசியை ஒன்றிய அரசு முறையாக ஒதுக்கீடு செய்யாததே தட்டுப்பாட்டிற்கு காரணமாகும். பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துக்கொள்ள ஆர்வமாக இருக்கும் சூழலில் மாநிலத்திற்கு தேவையான மருந்தை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாகும். தடுப்பூசி ஒன்றே கொரோனாவை விரட்டுவதற்கான ஆயுதம் என்று அரசு கூறிவருகிறது. இத்தகைய சூழலில் தினமும் ஆயிரக்கணக்கானோர் தடுப்பூசி போட மையங்களுக்கு சென்றுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி வருவது குறிப்பிடத்தக்கது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரேபரேலி தொகுதியில் ராகுல் போட்டி: பிரியங்கா போட்டியிடுவார் என கருதிய நிலையில் அமேதி தொகுதியில் கே.எல்.சர்மா நிற்கிறார்
ராஜீவ் காந்தி குறித்த விமர்சன விவகாரம்; பிரதமர் மோடியால் புரிந்துகொள்ள முடியாது: தியாகம் குறித்து பிரியங்கா உருக்கம்
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முரண்பாடு கவலை அளிக்கிறது: சீதாராம் யெச்சூரி
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!
கனமழையும் இருக்கு… வெப்ப அலையும் இருக்கு!.. அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்.. 7ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!
இந்திரா காந்தி, சோனியா காந்தி இருவரும் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி மக்களவைத் தொகுதியில் களம் இறங்கினார் ராகுல் காந்தி!!
அமேதி தொகுதியை பார்த்து அச்சமடைந்த ராகுல் காந்தி தற்போது ரேபரேலியை தேர்வு செய்துள்ளார் : பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை!!
விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில் விசாரணைக் குழு அமைப்பு
என் கனவுத் திட்டமாக தொடங்கி பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு… 24 மணி நேரத்தில் ஆஜராகவில்லை எனில் கைது செய்ய நேரிடும் என போலீஸ் எச்சரிக்கை
தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் போர்க்கால அடிப்படையில் பழுதுபார்ப்பு: போக்குவரத்து துறை தகவல்
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வரும் 6-ல் வெளியிடப்படும் :பள்ளிக்கல்வித்துறை
பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் பிரதமர் தேகவுடாவின் பேரன் பிரஜ்வல் மீது புதிய வழக்கு : கைது செய்ய ஜெர்மனி விரைகிறது தனிப்படை?