மைதிலி சிவராமனின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பெண்ணிய போராளியுமான மைதிலி சிவராமனின் தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், உரிமைக்காகவும் அயராது குரல் கொடுத்து புரட்சி பெண்ணாக திகழ்ந்தவர் மைதிலி சிவராமன் என்று முதலமைச்சர் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கீழ்வெண்மணி துயரத்தை அந்த கிராமத்திற்கே நேரில் சென்று விசாரித்து நீண்ட தொடர் கட்டுரையாக எழுதியவர் என்றும், தருமபுரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு எதிராக போராடி நீதி கிடைத்திட உழைத்தவர் மைதிலி சிவராமன் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். போர்க்குணமும், துணிச்சலும் நிரம்பிய ஒரு பெண்ணுரிமை போராளியை தமிழகமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பறிகொடுத்திருபப்து பேரிழப்பாகும் என முதலமைச்சர் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: