சிக்கமகளூரு: கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்டம் தரிகரே தாலுகா பாலேனள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சோமநாயக் (70). ஓய்வு பெற்ற தாசில்தாரான இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து தரிகரேயில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். நேற்று முன்தினம் மாலை இவரின் மொபைல் எண்ணிற்கு கொரோனா பாசிடிவ் இருப்பதாக தகவல் வந்தது.அதிர்ச்சியடைந்த சோமநாயக் காரை எடுத்து கொண்டு தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றார்.