மதுரை: சிறையில் கொலை செய்யப்பட்ட முத்துமனோவின் தந்தை பாபநாசம், சிபிசிஐடி விசாரணை கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், பாளை சிறையில் அதிகாரிகள், ஜாதிய பாகுபாட்டுடன் நடந்து கொள்வர். அங்கு குறிப்பிட்ட சில சமூகத்தினருக்கு என தனித்தனியாக அறைகள் வைத்துள்ளனர். இந்தக் கொலை குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடவும், சிறைக்குள் உள்ள சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க வேண்டுமென்றும், கொலை சம்பவத்தில் தொடர்புடைய சிறைத்துறை போலீசார் மீது சட்டரீதியாகவும், துறைரீதியாகவும் உரிய நடவடிக்கை எடுக்கவும், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.