* ஜார்க்கண்ட்டில் நாளை முதல் வரும் 29ம் தேதி வரை ஒருவாரத்திற்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் மட்டும் செயல்படும் என்றும், கோயில்கள் திறந்திருந்தாலும் குறைவான பக்தர்களே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. மக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.