மதபங்கா: ‘கூச் பெகார் துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி விசாரணை நடத்தி, அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்,’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் 4ம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. இதில், கூச் பெகார் மாவட்டத்தில் உள்ள சிதல்குச்சி வாக்குசாவடி மையத்துக்கு வெளியே பாஜ- திரிணாமுல் தொண்டர்கள் இடையே வன்முறை வெடித்தது. அவர்களை கலைப்பதற்காக மத்திய பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இப்பகுதியில் வன்முறை மேலும் பரவுவதை தடுக்க, அரசியல் கட்சித் தலைவர்கள் இங்கு வருவதற்கு 72 மணி நேர தடை விதிக்கப்பட்டது.