தேனி: தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த தக்காளிகளை பறித்து எறிந்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் அரண்மனைப்புதூர், கருவேல்நாயக்கன்பட்டி, அரப்படித்தேவன்பட்டி, குன்னூர், நாகலாபுரம், கோவிந்தநகரம், வெங்கடாசலபுரம் என பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் தக்காளி விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் சந்தைகளில் தக்காளி கிலோ ஒன்று ரூ.5க்கு விற்கப்படுவதால் விலைக்கு வாங்கும் மொத்த வியாபாரிகள் கிலோ ரூ.1க்கும், கிலோ ரூ.2க்கும் வாங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.