திண்டுக்கல்: மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிக அளவில் திண்டுக்கல், குட்டத்து ஆவாரம்பட்டி, வடமதுரை, அய்யலூர், சிறுமலை,மம்மானியூர், கொம்பேரிபட்டி போன்ற மலைப்பகுதிகளில் அதிக அளவில் மருத்துவ குணம் வாய்ந்த பலு பாகற்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பலு பாகற்காய் சமைப்பதற்கு கரி போன்ற சுவையுள்ளதால் அதிக அளவு பொதுமக்கள் விரும்பக்கூடிய காயாக உள்ளது. இருப்பினும் இது குறிப்பிட்ட கோடைகலத்தில் மட்டுமே கிடைப்பதால் இதன் விலை கிலோ 160 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. அதிகமாக சர்க்கரை நோயாளிகள் மற்றும் செரிமான சக்தி குறைவு உள்ள நபர்கள் உண்பதற்கு ஏற்ற மருத்துவ குணம் கொண்டு இருப்பதால் ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்குகின்றனர்.