பினராய் விஜயனுக்கு குறி வைக்கும் அமித்ஷா

கேரளாவில் எப்போது பிரசாரத்துக்கு சென்றாலும், முதல்வர் பினராய் விஜயனை நேரடியாக தாக்குவதையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழக்கமாக கொண்டிருக்கிறார். சில தினங்களுக்கு முன் இம்மாநிலத்தில் பிரசாரம் செய்த அவர், ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி, ஊழல், கடத்தல், பேராசை உள்ளிட்ட 7 பாவங்களை சுமப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், கேரளாவில் நடந்த தங்கம், டாலர் கடத்தலில் பினராய்க்கு உள்ள தொடர்புகள் குறித்து கேள்வி கேட்டு விட்டு சென்றார்.

இந்நிலையில், வயநாடு மாவட்டம், மீனங்காடியில் நேற்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், பினராய் விஜயனை வழக்கம்போல் ஒரு பிடிபிடித்தார். ‘‘தங்கம் கடத்தல் தொடர்பாக நான் கேட்ட கேள்விகளுக்கு பினராய் விஜயன் இதுவரை பதில் இல்லை. விஜயன்ஜி,  நீங்கள் முதல்வர் இல்லையா? வேறு யாரிடம் நான் கேள்வி கேட்க வேண்டும்? இந்த  தேர்தலுக்கு முன்பாக, மக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என தாழ்மையுடன்  கேட்டுக் கொள்கிறேன்,’’ என்றார். ஆனால், பினராய் விஜயனோ அமித்ஷாவின் குற்றச்சாட்டுகள செவி கொடுத்தும் கேட்டபதில்லை.

Related Stories: