வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய தொகுதி குடியாத்தம் (தனி) தொகுதி. தற்போது தனித்தொகுதியாக இருந்தாலும் 2001க்கு முன்பு வரை குடியாத்தம் பொது தொகுதியாக இருந்தது. இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள 2021 சட்டப்பேரவை தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் 15 பேர் போட்டியிடுகின்றனர். இதில் திமுக வேட்பாளராக அமலு, அதிமுக வேட்பாளராக பரிதா, அமமுக வேட்பாளராக ஜெயந்தி பத்மநாபன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலையேந்திரி, ஐஜேகே வேட்பாளராக வெண்ணிலா ஆகிய 5 பேர் போட்டியிடுகின்றனர். சுயேச்சை வேட்பாளராக பிரியா, ராதா ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரசாரத்தில் வெயிலை பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் பெண் வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.