சென்னை: தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.கே.எம்.சின்னையா தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட கடப்பேரி, திருநீர்மலை சாலை ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெண்கள் உற்சாகத்தோடு ஆரத்தி எடுத்துவரவேற்றனர். பின்னர் அவர் பேசியதாவது, “30 ஆண்டுகளாக போடப்படமால் இருந்த தாம்பரம் திருநீர்மலையை இணைக்கும் சாலை அமைச்சராக இருந்தபோது, முதல்வர் ஜெயலலிதாவிடம் சொல்லி அமைத்து கொடுத்தேன். இதேபோல், பட்டியலினத்து மக்கள் அதிகமாக பயன்படுத்தும் தாமரை குளத்தை அமைச்சராக நான் இருந்தபோது தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன். கடப்பேரி பகுதியில் சாலைகள் அமைத்து கொடுத்தேன். மின்விளக்குகள், முக்கிய சந்திப்புகளில் உயர்கோபுர விளக்குகள் எல்லாவற்றையும் பெற்று தந்தேன்.