புதுடெல்லி: டெல்லி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் போது எழும் அதிர்வுகள் குறித்து ஆய்வு செய்யும் பணி கடந்த 2011ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் வழக்கமான பணியாகும். இந்த பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மேற்கொள்ளப்படும் இந்த பணியின் ஒருபகுதியாக, மஞ்சள் வழித்தடம்(சமாய்பூர் பத்லி-ஹூடா சிட்டி சென்டர்) மற்றும் ஊதா வழித்தடம்(காஷ்மீரி கேட்-பல்லாப்கர்க்) இடையே 80 இடங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளது.