பெங்களூரு: கூட்டுறவு துறைகளில் காலியாக இருக்கிற 5 ஆயிரம் பணியிடங்கள் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்டி சோமசேகர் கூறினார். கர்நாடக மாநில கூட்டுறவு மகா சங்கம், மாநில பத்திரிகையாளர் கூட்டுறவு சங்கம், பெங்களூரு நகர மாவட்ட கூட்டுறவு சங்க கூட்டமைப்பு சார்பில் நடந்த கருத்தரங்கை அமைச்சர் எஸ்டி சோமசேகர் தொடங்கி வைத்து பேசியதாவது:``மாநில அரசின் சார்பில் கூட்டுறவு வளர்ச்சிக்காக ரூ.39 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது கூட்டுறவு துறை வளர்ச்சி குறிப்பிட்ட அளவில் வளர்ந்துள்ளது. கூட்டுறவு துறையின் சார்பில் பயிற்சி பெற்ற நிலையில் கூட்டுறவு வங்கிகள் அதிக அளவில் தொடங்கப்பட்டுள்ளன.