சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் தமாகாவில் விருப்ப மனுக்கள் நேற்று முதல் முதல் வினியோகிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார்.
அதன்படி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் வினியோகம் நேற்று காலை தொடங்கியது. முதல் நாளான நேற்று ஏராளமானோர் போட்டி போட்டு விருப்ப மனுக்களை வாங்கினர். பொதுத்தொகுதிகளுக்கு ரூ.5,000, மகளிர் மற்றும் தனித் தொகுதிகளுக்கு ரூ.2,500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.