டெல்லி: வேளாண் சட்டங்களை ஆதரித்து பிரதமர் பேசியதற்கு மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்கட்சியினரின் முழக்கத்தால் சிறிது நேரம் பதிலுரையை பிரதமர் மோடி நிறுத்தினார். வேளாண் சட்டங்கள் குறித்து பொய் கூறுபவர்கள் தனது உரைக்கு இடையூறு செய்வதாக மோடி குற்றம் சாட்டினார்.