சென்னை: தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த சசிகலா, தினகரன் முயற்சிப்பதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டியளித்தார். சென்னையில் டிஜிபி திரிபாதியிடம் புகராளித்த பின்னர் சட்டத்துறை அமைச்சர் பேட்டியளித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பையே அவமதிக்கும் வகையில் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துக்கிறார் என கூறினார். தமிழகத்தில் அமைதியை சீரிகுலைக்க தினகரன், சசிகலா தரப்பு சதித்திட்டம் தீட்டுவதாககும் குற்றம் சாட்டினார். 100 பேர் மனித வெடிகுண்டாக மாறுவோம் என மிரட்டல் விடுக்கிறார்கள் தினகரன் என தெரிவித்தார். பொதுமக்கள் உடைமைக்கும், உயிருக்கும் ஆபத்து விளைவிக்க திட்டமிடுகின்றனர் என குற்றம்சாட்டினார்.