சென்னை: துபாயிலிருந்து நேற்று முன்தினம் ஏர்இந்தியா சிறப்பு விமானம் சென்னை வந்தது. அதில் வந்த திருச்சியை சேர்ந்த கனகவள்ளி (56), நிஷாந்தி (30), கலா (53), பாத்திமா (34), புதுக்கோட்டையை சேர்ந்த ஜெயராஜ் (55), ஜெகதீஷ் (37), கபர்கான் (52), ராமநாதபுரத்தை சோ்ந்த முகமது ஹக்கீம் (25) ஆகிய 8 பேர் நடவடிக்கையில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களது வயிறு பகுதியை எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். அதில், தங்க மாத்திரை உருண்டைகள் வயிற்றில் இருப்பது தெரியவந்தது.