கைதல்: ‘மேடம் சீப் மினிஸ்டர்’ பட விவகாரம் தொடர்பாக பாலிவுட் நடிகை உள்ளிட்ட சிலர் மீது அரியானா போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். பாலிவுட் நடிகை ரிச்சா சாதா நடத்த ‘மேடம் சீப் மினிஸ்டர்’ என்ற திரைப்படம் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. வருகிற 22ம் தேதி வெளியிடப்படவுள்ள இப்படத்தில், சாதிகள் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களை அவமதிக்கப்பட்டுள்ளதாக ேபாலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரியானா மாநில பீம் சேனா அமைப்பின் கைதல் மாவட்டத் தலைவர் அசோக் தானியா, டிட்ரம் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், ‘திரைப்பட நடிகை ரிச்சா சாதா, டிம்பிள் கர்பண்டா, நடிகர் சந்தீப் சுக்லா, மனவ் கவுல், இயக்குனரும் எழுத்தாளருமான சுபாஷ் கபூர், திரைப்பட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் குழுவினர்கள் ‘மேடம் சீப் மினிஸ்டர்’ திரைப்படத்தில் வரும் காட்சிகள் மூலம் பட்டியல் சாதியினரையும், பழங்குடியினரையும் அவமதித்துள்ளனர்.