நன்றி குங்குமம் தோழி
எண்ணெய் தங்காமல் இருக்க இஞ்சி, வாழை மட்டை!
துவையல் தேவைக்கு அதிகமாக இருந்தால் குறிப்பிட்ட அளவில் தோசை மாவை எடுத்து அதில் துவையலை கலக்கி தோசையாகச் சுட்டு விடுங்கள். வித்தியாசமான ருசி தரும்.- ஆர்.அஜிதா. கம்பம்.சேனைக்கிழங்கை தோல் சீவி துண்டுகளாக்கி அத்துடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்து வேக வைத்து பாருங்கள். சீக்கிரமே வெந்திடும்.- தஞ்சை ஹேமலதா, வெண்டையம்பட்டி.தோசை மிருதுவாக பூப்போல இருக்க தோசை மாவில் சிறிதளவு சாதம் வடித்த கஞ்சியை சேர்த்து தோசையை வார்த்தால் தோசை பூப்போல இருக்கும்.- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன் புதூர்.கொழுந்து வெற்றிலை, சுண்ணாம்பு சிறிது சேர்த்து அரைத்து நகச்சுற்று உள்ள இடத்தில் கட்டினால் விரைவில் குணம் தெரியும்.- சண்முகத்தாய், சாத்தூர்.சிறிது வாழை மட்டை, இஞ்சி இரண்டையும் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்த பின்பு, அந்த எண்ணெயில் பலகாரங்கள் செய்தால் பலகாரங்களில் எண்ணெய் அதிகம் தங்காது.- ஆர்.அம்மணி ரெங்கசாமி, தேனி.இட்லி மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால் ஜவ்வரிசியை தூள் செய்து உடன் சேர்க்கலாம். மாவு கெட்டியாவது மட்டுமில்லாமல் இட்லியும் மிருதுவாக இருக்கும்.- ஆர். ஜெயலட்சுமி, திருநெல்வேலி.
கேக் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்க * மைதாவை சேர்த்த உடனேயே பேக் செய்துவிட வேண்டும் இல்லை என்றால் கடினமாகி விடும்.* கேக் ரெடியான உடனேயே அவனிலிருந்து எடுக்கக் கூடாது. சிறிது நேரம் அந்த சூட்டிலேயே வைக்க வேண்டும்.* கேக் ரெடியானவுடனே சூடாக கவிழ்க்கக் கூடாது. கேக் உடைந்துவிடும்.* கப் அளவுகளை கடைபிடிக்கும்போது அழுத்தியும், சலித்தும் அளக்கக் கூடாது.* எவ்வளவுக்கெவ்வளவு வெண்ணெய், சர்க்கரையை நுரைக்க அடிக்கிறோமோ அந்த அளவுக்கு கேக் சாஃப்டாக இருக்கும்.* ஐசிங் செய்யும்முன் கேக் மீது சர்க்கரை தண்ணீரைத் தடவி பின் ஐசிங் செய்யலாம்.* ப்ளம் கேக் செய்யும்போது பருப்புகளை மைதா தூவி கலக்க, அடியில் தங்காமல் எல்லா இடத்திலும் பரவி இருக்கும்.
- மகாலெட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.