சிறையை அழகுபடுத்திய கைதிகள்!

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரைச் சேர்ந்த சாதுராம் என்பவர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உதய்ப்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சுவர் ஓவியங்கள் மீது அலாதி ஆர்வம் கொண்ட சாதுராம், தன் விருப்பத்தை சிறை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். அவரது ஆர்வத்தை அறிந்த ஊழியர்கள் சிறையின் சுவர்களை அலங்கரிக்க அனுமதி கொடுத்தனர். இதனையடுத்து சாதுராம் தனது கைவண்ணத்தைக் காண்பித்து சிறையை வன்ணமயமாக மாற்றியுள்ளார். அவருடன் இணைந்து மேலும் 15 கைதிகளும் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர். 

Related Stories: