பெங்களூரு: கூட்டணி ஆட்சியின் போது மேலவை மூத்த உறுப்பினர் பசவராஜ்ெஹாரட்டிக்கு தலைவர் பதவி வழங்க காங்கிரஸ் ஆதரவு வழங்கவில்லை என்று முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார். பெங்களூரு பத்மநாப நகரில் உள்ள முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா வீட்டில் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மேலவை உறுப்பினருமான சி.எம். இப்ராஹிமுடன் ஆலோசனை நடத்திய எச்.டி.குமாரசாமி பின்னர் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக கூறியதாவது:``மாநிலத்தில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு அமைந்த நேரத்தில் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா டெல்லிக்கு சென்று காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்க மேலவை தலைவர் பதவியை மஜதவுக்கு விட்டுக்கொடுக்க பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அப்போது கூட்டணி தர்மம் கடைப்பிடிக்கவில்லை. அந்த சூழ்நிலை அப்போதே முடிந்தது. தற்போது புதியதாக ஒன்று ஆரம்பித்துள்ளது.