வரும் 14ம் தேதி விஏஓ அலுவலகங்கள் முன் 2ம் கட்ட போராட்டம்: ராமதாஸ் டிவிட்டரில் பதிவு

சென்னை: டிவிட்டர் பதிவில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பதாவது: வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கோரி சென்னையில் நான்காவது நாளாக போராட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது. அடுத்து 14ம் தேதி கிராம நிர்வாக  அலுவலர் அலுவலகங்கள் முன் இரண்டாம் கட்ட போராட்டம். வீடுவீடாக சென்று மக்களை சந்திப்போம், நியாயத்தை விளக்குவோம் அனைவரின் ஆதரவையும் திரட்டுவோம். 20% தனி இட ஒதுக்கீட்டை வென்றெடுப்போம்.

Related Stories: