லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் அருகே கார் மீது லாரி மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 6 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் அருகே பிரயாக்ராஜ்-லக்னோ நெடுஞ்சாலையில் நேற்று இரவு லாரி மீது கார் மோதி விபத்துக்குள்னது. அதிவேகமாக சென்று மோதியதால், காரின் முன்பகுதி கடுமையாக சிதைந்து, லாரியில் சிக்கிக்கொண்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கேஸ் கட்டர் உதவியுடன் காரின் பாகங்களை வெட்டி எடுத்து உள்ளே இருந்தவர்களை சடலமாக மீட்டனர்.