உத்திரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் அருகே கார் மீது லாரி மோதி கோர விபத்து: சம்பவ இடத்திலேயே 6 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்த சோகம்

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் அருகே கார் மீது லாரி மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 6 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் அருகே பிரயாக்ராஜ்-லக்னோ நெடுஞ்சாலையில் நேற்று இரவு லாரி மீது கார் மோதி விபத்துக்குள்னது. அதிவேகமாக சென்று மோதியதால், காரின் முன்பகுதி கடுமையாக சிதைந்து, லாரியில் சிக்கிக்கொண்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கேஸ் கட்டர் உதவியுடன் காரின் பாகங்களை வெட்டி எடுத்து உள்ளே இருந்தவர்களை சடலமாக மீட்டனர்.

இந்த கோர விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும்  உயர் அதிகாரிகளை அந்த இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: