திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே குட்டையில் குளிக்கும்போது, சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியானான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.திருக்கழுக்குன்றம் அடுத்த கருமாரப்பாக்கம் கிராமம், மலை மேட்டு தெருவை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். பெயின்டர். இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு தமிழ்செல்வன் (14), லித்தீஷ் (9) ஆகிய மகன்கள் உள்ளனர். லித்தீஷ், கருமாரப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான்.கடந்த சில நாட்களாக திருக்கழுக்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. இதையொட்டி, கருமாரப்பாக்கத்தில் உள்ள ஒரு குட்டையும் மழைநீரல் நிரம்பியுள்ளது.