மூணாறு சாலையோரம் சுற்றித்திரியும் காட்டு யானை: வாகன ஓட்டிகள் அச்சம்

உடுமலை: உடுமலையை அடுத்துள்ள மூணாறு செல்லும் வழியில் அமராவதி அணைக்கு பின்புறம் புங்கன் ஓடை உள்ளது. வனப்பகுதியில் தண்ணீர் இல்லாத நிலையில் வனவிலங்குகள் இங்கு தண்ணீர் குடிக்க வருவது  வழக்கம். நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை, இப்பகுதியில் தண்ணீர் குடித்துவிட்டு சாலையோரத்தில் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்தது இதை அவ்வழியாக சென்ற மழைவாழ் மக்கள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.யானை நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

Related Stories: