கோடை விடுமுறை நிறைவடையும் தருவாயில் உள்ளதால், கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

கோவை: கோடை விடுமுறை நிறைவடையும் தருவாயில் உள்ளதால், கோவை குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பதால் வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர். இதனால் வனத்துறையினர் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலாப் பயணிகள் டிக்கெட் வாங்கி உள்ளே செல்கின்றனர். கூட்டம் அதிகரித்துள்ளதால் ஒவ்வொரு குழுக்களாக பிரித்து நேர அடிப்படையில் வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளை உள்ளே அனுமதித்து வருகின்றனர்.

The post கோடை விடுமுறை நிறைவடையும் தருவாயில் உள்ளதால், கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்! appeared first on Dinakaran.

Related Stories: