ஒருநாள் கொரோனா பாதிப்பு : 75 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது: 51 லட்சம் பேர் குணமாகினர்

புதுடெல்லி: நாடு முழுவதுமான தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 75 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.  மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:  நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 61 லட்சத்து 45 ஆயிரத்து 291 ஆக உள்ளது. ஒரே நாளில் புதிதாக 70,589 பேர் தொற்றினால் பாதித்துள்ளனர். தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை,  தற்போது 75 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் நோய் பாதித்த 776 பேர் இறந்துள்ளனர்.  இதுவரை மொத்தம் 96 ஆயிரத்து 318 பேர் உயிரிழந்துள்ளனர்.

இறப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. நோய் பாதித்தவர்கள் 83.01 சதவீதம் பேர், அதாவது 51 லட்சத்து ஆயிரத்து 397 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும், 9,47,576 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கடந்த 16ம் தேதி 50 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு, 12 நாட்களில் பத்து லட்சம் அதிகரித்து 28ம் தேதி 60 லட்சமாக உயர்ந்தது. நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 7 கோடியே 31 லட்சத்து 10 ஆயிரத்து 41 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  நேற்று முன்தினம் மட்டும் 11 லட்சத்து 42 ஆயிரத்து 811 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது.

Related Stories: