லக்னோ : உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள முகலாய அருங்காட்சியகத்திற்கு மராட்டிய போர்வீரர் சத்ரபதி சிவாஜியின் பெயரை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சூட்டினார். ஆக்ராவில் இருக்கும் உலக அதிசயமான தாஜ்மஹாலின் கிழக்கு வாசலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில், முகலாய அருங்காட்சியகத்தின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. ரூ. 140 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த அருங்காட்சியகம், உபியில் முதல்வராக இருந்த சமாஜ்வாதியின் அகிலேஷ்சிங் யாதவால் துவக்கப்பட்டது.கடந்த 2016ம் ஆண்டு தொடங்கிய இந்த கட்டுமானப்பணியை மாநில சுற்றுலாத் துறை மேற்கொண்டு வருகிறது. இந்த அருஙாட்சியக திட்டபணிகளை முதல்வர் ஆதித்யநாத் நேற்று ஆய்வு செய்தார்.