இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகுந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து நொறுக்கினர். இந்நிலையில் இண்டிகநத்தா வாக்குச்சாவடி மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மறுவாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மறுவாக்குப் பதிவையும் கிராம மக்கள் புறக்கணித்துள்ளதால் வாக்குச்சாவடி மையம் வெறிசோடி காணப்படுகிறது. வாக்குச்சாவடி மையம் சூறையாடப்பட்ட விவகாரத்தில் 33 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து வீடுகளை பூட்டிவிட்டு கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
The post கர்நாடகாவில் மறுவாக்குப்பதிவையும் புறக்கணித்த கிராமம்: வீடுகளை பூட்டி விட்டு கிராமத்திலிருந்து வெளியேறிய மக்கள் appeared first on Dinakaran.