காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த பெரியார் நகரில் தொடங்கும் ஓரிக்கை புறவழிச்சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து வாலாஜாபாத் வழியாக வந்தவாசி, செய்யாறு, வேலூர் உள்பட பல பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், காஞ்சிபுரம் நகருக்குள் வராமல் செல்ல ஓரிக்கை புறவழிச்சாலையை பயன்படுத்துகின்றனர். பெரியார் நகரில் இருந்து மிலிட்டர் சாலை வழியாக செவிலிமேடு செல்லும் வழியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. சின்ன ஐயங்குளம், அண்ணா குடியிருப்பு பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.