டெல்லி: நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மத்தியமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வாழ்த்து தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் திட்டமிட்டபடி இன்று நடைபெற இருக்கிறது. இந்தியா முழுவதும் 3,842 மையங்களில் 15.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் 14 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 238 தேர்வு மையங்களில் 1.17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி நடைபெறுகிறது. மாணவர்கள் இரண்டரை மணி நேரம் முன்பாக தேர்வு மையத்திற்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.