திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தங்கியிருந்த சாமியார், குரங்குகளை பிரிந்த மனவேதனையில் இறந்தார்.திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வசித்து வந்த சாமியார் ஒருவர், தன்னுடன் எப்போதும் இரண்டு குரங்குகளை வைத்திருப்பது வழக்கம். வெளியூர் செல்லும் போதும் அந்த குரங்குகளை உடன் அழைத்துச் செல்வாராம். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிரிவலப்பாதை வழியாக ரோந்துப்பணியில் ஈடுபட்ட வனத்துறையினர், சாமியார் ஒருவர் இரண்டு குரங்குகளை சங்கிலியால் கட்டி வைத்திருப்பதை பார்த்தனர். வனத்துறை சட்டப்படி, குரங்குகளை வைத்திருப்பது தவறு என சாமியாரிடம் தெரிவித்த வனத்துறையினர், சாமியாரிடம் இருந்த இரண்டு குரங்குகளையும் மீட்டு, கவுத்திமலை காப்புக்காடு பகுதியில் விட்டனர்.