சென்னை: கொலம்பியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் போதைப்பொருட்கள் கடத்திய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர் எட்வின் என்ரிக்யூ (32). இவர் துபாயிலிருந்து, சென்னைக்கு விமானத்தில் போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் அதிகாரிகள் கடந்த 2015 ஜூன் 22ம் தேதி, சென்னை விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, எட்வின் விமான நிலையம் வந்ததும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் அவரை மடக்கி சோதனை செய்தனர்.