திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெஞ்ஞாறமூடு அருகே வெம்பாயம் பகுதியை சேர்ந்தவர் மிதிலாஜ்(32). தேம்பாமூடு பகுதியை சேர்ந்தவர் ஹக் முகமது (28). 2 பேரும் மார்க்சிஸ்ட் கட்சியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளாக இருந்தனர். 30ம்தேதி நள்ளிரவு 6 பேர் கொண்ட மர்ம கும்பல் 2 பேரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது.இது தொடர்பாக திருவனந்தபுரம் எஸ்பி அசோகன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஷஜித், நஜீப், அஜித், சதி, சஜீவ், சனல் ஆகிய 6 பேரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.