கொடைக்கானல்: கொடைக்கானலில் ஏரிச்சாலை பகுதிக்குள் நுழைந்த காட்டு மாடுகளின் கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.கொடைக்கானல் நகரப்பகுதிகளில் அவ்வப்போது காட்டுமாடுகள் உலா வருவது வழக்கமான ஒன்றாகி விட்டது. முக்கிய சுற்றுலா இடங்களிலும் சுற்றுலா பயணிகள் நடமாடும் இடங்களிலும் ,பொதுமக்கள் கூடும் இடங்களிலும் ,பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் காட்டுமாடுகள் அவ்வப்போது உலா வந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. காட்டுமாடுகள் நகரப் பகுதிக்குள் வருவதை கட்டுப்படுத்த பல்வேறு தரப்பினர் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.