தண்டையார்பேட்டை: மண்ணடி மாஸ்கன்சாவடியை சேர்ந்தவர் திவான் அக்பர் (45). இவர் செம்மரக்கடத்தல், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர் என கூறப்படுகிறது. தற்போது ஸ்கிரீன் பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவருக்கும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தவ்பீக் என்பவருக்கும் பண பிரச்னை இருந்தாக கூறப்படுகிறது. தவ்பீக் பல்வேறு பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவர். இந்நிலையில், கடந்த 17ம் தேதி தவ்பீக் தலைமையிலான கும்பல் ரூ.2 கோடி கேட்டு திவான் அக்பரை காரில் கடத்தி சென்று வடபழனி, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய இடங்களில் அடைத்து வைத்து, அடித்து உதைத்தது.