திருப்பரங்குன்றம்: பிளஸ் 1 படிக்கும் மாணவர் சிற்பியாக மாறி கல்லில் நாதஸ்வரம், வாள் உள்ளிட்ட அழகிய கற்சிற்பங்களை உருவாக்கி வருகிறார். மதுரை மாவட்டம், திருநகரை சேர்ந்தவர் ஸ்தபதி பாலமுருகன். இவர் விளாச்சேரியில் சிற்ப கலைக்கூடம் நடத்தி வருகிறார். இவருடைய 2வது மகன் கார்த்திக்ராஜா(16). பிளஸ் 1 மாணவர். கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்காததால், சிற்ப கலைக்கூடத்திற்கு சென்று தந்தைக்கு உதவியாக வேலை செய்து வந்துள்ளார். சிற்பம் செதுக்குவதிலிருந்த ஆர்வத்தால் கற்களாலான நாதஸ்வரம், வாள், மணி, குத்துவிளக்கு போன்றவற்றை சிற்பமாக செதுக்கியுள்ளார்.