குல்மார்க்: ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பனிக்குள் விழுந்த ராணுவ வீரரின்உடல் 7 மாதங்களுக்கு பின் மீட்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சாமோலி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திர சிங் நேகி(36), கடந்த 2001ம் ஆண்டு ராணுவத்தில் இணைந்து கார்வால் ரைபிள்ஸ் பிரிவில், ஹவில்தாராக பணியாற்றினார். இவரது மனைவி ராஜேஸ்வரி தேவி, மூன்று குழந்தைகளுடன், உத்தரகண்டின் டேராடூனில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஜனவரி 8ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், பணியில் இருந்த ராஜேந்திர சிங் நேகி, அடர் பனிக்குள் விழுந்தார். அவரை, 3 மாதங்கள் வரை தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், பணியில் வீர மரணமடைந்ததாக, ராணுவத்தினர் முடிவு செய்தனர்.