பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி லட்ச்சார்ச்சனை விழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஆடி லட்ச்சார்ச்சனைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும், கோயில் நித்தியப்படி உரிய பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று லலிதா ஹோமம் நடந்தது. புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் உள்ள கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் நடந்தது. யாகத்தில் பழங்கள், திரவிய பொருட்கள், பட்டாடை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.