நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்..!! நடிகை ரியாவிடம் நாளை மீண்டும் அமலாக்கத்துறை விசாரணை!!!

மும்பை: இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் புதிய திருப்பமாக அவரது வங்கி கணக்கிலிருந்து 15 கோடி ரூபாய் பணம் மாயமானது தொடர்பாக நடிகை ரியாவிடம் அமலாக்கத்துறை நாளை மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. நிதி முறைகேடு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடிகை ரியா மற்றும் அவரது சகோதரரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தினர். அப்போது இருவரது பெயரில் வாங்கப்பட்டுள்ள சொத்துகளுக்கு நிதி ஆதாரம் எப்படி? கிடைத்தது என்று அதிகாரிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். இதனிடையே சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் மராட்டிய அரசுக்கு எதிராக சதி வலை பின்னப்படுவதாக சிவசேனா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலையில் சுஷாந்த் சிங் மற்றும் அவரது சகோதரியின் வங்கி கணக்கிலிருந்த நிரந்தர வைப்பு நிதியில் 2 கோடியே 63 லட்சம் ரூபாய் பணம் ஆடிட்டருக்கு மாற்றப்பட்டுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு ரியாவின் தூண்டுதல் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இதன்தொடர்ச்சியாக நாளை மீண்டும் நடிகை ரியாவிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. இதனிடையே அரியானா மாநிலத்தில் உள்ள மகளின் வீட்டிற்கு சென்ற சுஷாந்தின் தந்தையை, அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது சிபிஐ விசாரணையில் நிச்சயம் நீதி கிடைக்கும் என்று அவர் உறுதி அளித்தார்.

Related Stories: