மும்பை: இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் புதிய திருப்பமாக அவரது வங்கி கணக்கிலிருந்து 15 கோடி ரூபாய் பணம் மாயமானது தொடர்பாக நடிகை ரியாவிடம் அமலாக்கத்துறை நாளை மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. நிதி முறைகேடு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடிகை ரியா மற்றும் அவரது சகோதரரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தினர். அப்போது இருவரது பெயரில் வாங்கப்பட்டுள்ள சொத்துகளுக்கு நிதி ஆதாரம் எப்படி? கிடைத்தது என்று அதிகாரிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். இதனிடையே சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் மராட்டிய அரசுக்கு எதிராக சதி வலை பின்னப்படுவதாக சிவசேனா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.