டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தாண்டு நடைபெறவிருந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் அக்டோபரில் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கொரோனா எதிரொலியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை வரும் அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடத்த ஐசிசி முடிவு செய்திருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உலகக்கோப்பை தொடரை நடத்த ஆஸ்திரேலியா மறுத்து வந்தது. மேலும், உலகம் முழுவதும் பரவி வரும் நோய் தொற்றினால், மற்ற நாடுகளும் இந்தத் தொடரில் பங்கேற்பதில் சந்தேகமாகியுள்ளது.