கூடலூர்: மதுரைக்கு தண்ணீர் கொண்டுசெல்லும் திட்டத்திற்காக கம்பம் அருகே தடுப்பணை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த இடத்தில், மதுரை மாநகராட்சி அதிகாரிகள் ரகசிய ஆய்வு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முல்லைப் பெரியாற்று தண்ணீரை ரூ.1,295 கோடி செலவில் மதுரைக்கு குழாய் மூலம் கொண்டு செல்ல சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தேனி மாவட்டத்தில் கம்பம் கூட்டுக்குடிநீர் திட்ட தடுப்பணைக்கு மேல் பகுதியில் புதிய தடுப்பணை கட்டி தண்ணீர் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது. ஆனால் கம்பம் கூட்டுக்குடிநீர் திட்ட தடுப்பணைக்கு மேல் புதிய தடுப்பணை கட்ட, கம்பம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.