திருப்பதி: திருப்பதியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஜே.சி.பி மூலம் குழியில் தள்ளி அடக்கம் செய்ததற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. காய்கறி சந்தையில் பணியாற்றி வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில் அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் ஹரிச்சந்திரா மயானத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் ஜேசிபி இயந்திரம் மூலம் உடலை எடுத்து சென்று ஏற்கனவே தோண்டப்பட்ட குழியில் தூக்கி போட்டு அடக்கம் செய்துள்ளனர்.