ரிப்பன் மாளிகையை செங்கொடி சங்கம் முற்றுகை

சென்னை : சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை முழுமையாக வழங்காததுதான் இதற்கு காரணம் என்று தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டி உள்ளன.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி களப்பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில் ேநற்று ரிப்பன் மாளிகையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

Related Stories: