நாகர்கோவில்: நாகர்கோவிலில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு திரண்ட இளைஞர், இளம்பெண்கள் சமூக இடைவெளியை மறந்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவில் கோட்டார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வைத்துல் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், அவசரகால மருத்துவ உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு கடந்த 15ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் மருத்துவ உதவியாளர் பணிக்கு தேர்வு நடைபெற்றது. இதில் பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று ஓட்டுநர் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு இன்று காலையில் ஏராளமான இளைஞர்கள் திரண்டனர்.