திருப்புவனம்: கீழடி அருகே மணலூர் அகழாய்வில் கண்டறியப்பட்ட உலைகலனில் இருந்து, மண்பாண்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. 6ம் கட்ட அகழாய்வில் கீழடி தவிர்த்து மணலூர், அகரம், கொந்தகை உள்ளிட்ட நான்கு இடங்களிலும் ஆய்வு நடந்து வருகிறது. ஒவ்வொரு இடங்களிலும் 3 முதல் 5 குழிகள் வரை தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடக்கின்றன. ரூ.40 லட்சம் செலவில் நடந்து வரும் 6ம் கட்ட அகழாய்வு பணிகளில், இதுவரை முதுமக்கள் தாழிகள், எலும்புகள், கருப்பு சிவப்பு வண்ண பானைகள், பானை ஓடுகள், விலங்கு எலும்புகள், செங்கற்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. மணலூரில் 3 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்தன.