தொட்டியம்: திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அலகரை கிராமத்தை சேர்ந்தவர்கள் கங்காதரன் (31), தமிழரசன் (28), மோகன்ராஜ் (16). உறவினர்களான இவர்கள், நேற்றுமுன்தினம் பாப்பாப்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிரசரில் 3 நாட்டு வெடிகளை விலைக்கு வாங்கி வந்து மணமேடு பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் வீசி மீன்பிடித்துள்ளனர். இதில் பிடித்த மீன்களை அலகரையில் உள்ள சகோதரர் பூபதி வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். மீதமிருந்த ஒரு நாட்டு வெடியை கட்டிலில் வைத்துவிட்டு கொல்லைப்புறத்தில் மீன்களை சமைப்பதற்கு சுத்தம் செய்துள்ளனர்.