திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் அனைத்து பக்தர்களுக்கும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 3 மாதங்களாக ஊரடங்கு காரணமாக சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் 5ம் கட்ட ஊரடங்கில் தளர்த்தப்பட் விதிகளின் காரணமாக வழிபாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து ஏழுமலையான் கோவிலில் 8 மற்றும் 9, 10 ம் தேதிகளில் உள்ளூர் பக்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சோதனை முறையில் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் அனைத்து பக்தர்களுக்கும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு
- சுவாமி தர்சன்
- பக்தர்கள்
- திருப்பதி எசுமலயாயன் கோயில்
- சுவாமி தரிசனத்தை அனுமதிக்க அனைத்து பக்தர்களும்
- திருப்பதி எசுமலயன் கோயில்