யார் இந்த மரியா?

நன்றி குங்குமம் முத்தாரம்

பெருவின் ராக் ஸ்டாராக மாறிவிட்டார் மரியா. இவரை மக்கள் அன்புடன் டோனி என்று அழைக்கின்றனர். குழந்தைகளும் பெண்களும் மரியாவுடன் செல்ஃபி எடுக்க போட்டிபோடுகின்றனர். தொலைக்காட்சி சேனல்கள் இவரது நேர்காணலுக்காக காத்திருக்கின்றன. கலைஞர்கள் மரியாவின் ஓவியத்தை வரைந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளுகின்றனர்.

யார் இந்த மரியா? அப்படி அவர் என்ன செய்துவிட்டார்? பெருவின் நிதி அமைச்சர் தான் இந்த மரியா. கொரோனா காலத்தில் இவர் தீட்டிய திட்டங்கள் சாதாரண மக்களுக்கும், சின்னதாக தொழில் செய்துகொண்டிருந்தவர்களுக்கும் பெரும் பலனைத் தந்திருக்கிறது. இத்தனைக்கும் மரியாவின் வயது 35. இவர் மட்டும் இப்போது நிதி அமைச்சராக இல்லாமலிருந்தால் பெரு ஆட்டம் கண்டிருக்கும் என்கின்றனர் அந்நாட்டின் அரசியல் விமர்சகர்கள்.

Related Stories: